Saturday, October 3, 2009

மெழுகுதிரியா களிமண்ணா உறுதியான காதல்....

நீ மெழுகாக,
நான் திரியாக,
நாம் மெழுகுதிரியாக
நம் காதல் சில காலம்.

நீ உருகிவிட்டாய்,
நான் கருகிவிட்டேன்,,
பின்னர் ஒரு நாளில்
யாரோ கிழித்த தீக்குச்சியால்.

மெழுகு உருக
திரி எரிந்ததா...
திரி எரிய
மெழுகு உருகியதா..

தம் காதல் தோல்விக்கு
தீக்குச்சிதான் காரணமா?

அடுத்தவர் சதியில்
உருகும் காதல் வேண்டாம்,
இறுகும் காதல் வேண்டும்.

மெழுகு போல் அல்ல!
களிமண் போல!!

No comments: