Friday, May 22, 2009

சின்னச் சின்ன ஓவியங்கள்....

1)
கூடவே ஓடிவரும்
வாகனப் பயணத்தில் மேகங்களும்
வாழ்க்கைப் பயணத்தில் சோகங்களும்!

2)
ஒரு பூவைச் சூழ்ந்து
ஒரு கோடி மொட்டுக்கள்,
வானக் கூந்தலில் நட்சத்திரங்கள்!

3)
அழகான கவிதையது
நடுவில் முற்றுப்புள்ளி
அவள் நெற்றியில் பொட்டு!

4)
நழுவிய இதயம்
காதலியின் காலடியில்,
காதலியோ என் பிடியில்!

5)
உன்னைப் பிரிந்த பின்னும்
என்னைப்பிரிய மறுக்கும்
நாட்குறிப்பில் உன் ஞாபகங்கள்!

6)
சோகம்தான் ஆனால் சுகம்
நிகழ்வது முன்னையது,
நினைவில் பின்னையது!

7)
முழு நிலவில்
பவளப் பாறை,
காதலியே இன்னும் சிரி!

No comments: