Friday, May 22, 2009

காதல் நெருப்பு!

பஞ்சும் இருந்தது,
பக்கமாகவே
நெருப்பும்
இருந்தது,

இளங்காலைப் பொழுதில்
தாலாட்டிய தென்றலின்
மெல்லிய வேகத்தில்
பற்றிக்கொண்டது
சமுதாயத்தின் தேகம்!

வேறென்ன...

பஞ்சாய் மாறிப்
பறந்து போனது
காதல்!

கண்ணீரில்
அணைகிறது
நெருப்பு!!

No comments: