Friday, October 31, 2014

மரபுக் கலைகளும் மாற்றமும்

இக் கட்டுரையின் தலைப்பானது தன்னிச்சையாக எம்மை மூன்று விடயங்களைப் பற்றிய புரிதலின் அவசியத்தை நோக்கித் துரத்துகிறது. இங்கு குறிப்பிடப்படும் “மரபு”, “கலை”, மற்றும் “மாற்றம்” ஆகிய மூன்று சொற்களும் வெறுமனே ஒரு வாக்கியத்தினூடாகவோ அல்லது வரைவிலக்கணத்தினூடாகவோ இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியதல்ல. ஏனெனில் அவை தனித்தனியாக தமக்கான தனித்துவத்தைக் கொண்டமைந்தவை மட்டுமன்றி தனித்தனியான மூன்று கட்டுரைகளுக்கான தலைப்புகளாகவூம் காணப்படுகின்றன. எனவே நாம் சற்று விரிவாக இவற்றை ஆராய்வதினூடாக எமது புரிதலை இலகுபடுத்திக் கொள்வோம்.

மரபு

நாம் மரபு எனும் சொல்லைச் சரதாரணப் பேச்சு வழக்கில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பாவிக்கின்றௌம். மரபுக்கவிதை, மரபணு, மரபுத்தொடர், மரபியல் நோய்இ மரபுக்கூறு, மரபுக்கலை போன்றவை அவற்றுட் சில. இவற்றில் மரபணு அல்லது மரபணுச் சோதனை (DNA Test) மற்றும் மரபியல் நோய் (Inherited Diseases) எனும் சொற்கள் தற்காலத்தில் மிகவூம் பிரபலமடைந்திருப்பதுடன் அனைவராலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியதாகவூம் காணப்படுகின்றன. அவை மரபு எனும் சொல்லும் எமக்கு முந்திய சந்ததியும் ஏதோவொரு வகையில் தொடர்பு பட்டுள்ளதையும் கோடிட்டுக் காட்டுகிறது.

மரபியல் விஞ்ஞானமானது (Genetics Science) மரபு என்பதை ஒரு செய்தியெனவூம்; அச்செய்தியை தலைமுறைகளினூடாக எடுத்துச் செல்லும் கருவியே மரபணு (Gene) எனும் மிகச்சிறிய மூலக்கூறுகள் எனவும் விளக்குகிறது. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் அல்லது பரம்பரையில் சில தலைமுறைகள் கடந்தபின்னரும் உருவ ஒற்றுமை காணப்படுவதற்கும், சில கலைத் திறமைகளும், நல்ல குரல்வளம் போன்ற அரிய வரங்களும் தலைமுறை தலைமுறையாக தொடர்வதற்கும் இந்த மரபணுக்களே காரணமாகும். அவ்வாறே பரம்பரையினூடாக இம் மரபணுக்களினால் காவிச் செல்லப்படும் நிறக்குருடு, குருதி உறையாமை போன்ற நோய்களும் காணப்படுகின்றன. அவையே பரம்பரை நோய்கள் (Genetic Diseases) எனக் குறிப்பிடப் படுகின்றன.

ஓர் குறிப்பிட்ட இனத்தில் அல்லது பரம்பரையில் பிறக்கும் மனித உடல் தொடர்பான செய்திகள் மரபணுக்கள் மூலம் தலைமுறைகளினூடாக தொடர்வதைப் போன்றே அக் குறிப்பிட்ட இனத்தின் அல்லது பரம்பரையின் வாழ்க்கைமுறை தொடர்பான செய்திகளும் தொடர்கின்றன. இவையே பாரம்பரியம் என்றும், பண்பாடென்றும், நாட்டுப்புற மரபென்றும், இன்னும் பல சொற்களாலும் குறிப்பிடப்படுகின்றது. சமய நம்பிக்கைகளும், சடங்குகளும், வாழ்க்கை முறைகளும், வேட்டையாடுதல், விவசாயம், சேமித்தல், உபசரித்தல், தற்காப்பு, பொழுது போக்கு போன்ற அத்தனை செய்திகளும் தலைமுறைகளினூடாக கடத்தப்படுகின்றன. இவற்றைக் காவிச்செல்ல எம் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட கருவிகளையே நாம் இன்று கலைகள் என்று போற்றுகின்றோம்.

கலை

கலை என்றால் என்னவென்பதற்கு பல்வேறு முறைகளில் விளக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. கலை என்பது உணர்வுகளின் வெளிப்பாடு என்று உளவியலாளர்கள் கூறுவர். நாம் காண்பதை மட்டுமல்ல உணர்ந்ததையும் மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும் ஓர் உத்தியே கலை எனவும் கூறலாம். பொதுவாகக் கலைகள் அதனைப் படைப்பவர்களுக்கும், அக்கலையை இரசிப்பவர்களுக்கும் மனதிற்கு மகிழ்ச்சி தருவதுடன் பல்வேறு வகையான செய்திகளையும், அறிவுரைகள், நற்பண்புகள், பண்பாட்டு விழுமியங்கள், அறிவியல் போன்றவற்றை பரப்புவதற்கும் ஏதுவாக அமைகின்றன. நாம் எதனைப் போற்றிப் பாராட்டுகின்றௌமோ அதுவவும் கலையாகிறது. எனவேதான் வெறுமனே பார்த்து இரசிப்பதனை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு படைக்கப் படுவதனைவிட இரசிகர்களை சிந்திக்கத் தூண்டும் படைப்புகள் காலம் காலமாக நின்று நிலைத்து பாராட்டைப் பெறுகின்றன. கலை காலத்தால் அழியாதது எனும் பெருமையைப் பெற்றதும் இவ்விதம் தான்.

நாலு வேதம், ஆறு சாத்திரம், பதினெண் புராணம், அறுபத்துநாலு கலைஞானம் என்பது பழந்தமிழ் இலக்கியப் பாகுபாடாகும். “ஆயகலைகள் அறுபத்திநான்கு” என கம்பர் குறிப்பிடுவதும் இதனைத்தான். அந்த அறுபத்தி நான்கு கலைகளும் எவையென்பதனை இங்கு குறிப்பிடுவது இக்கட்டுரைக்கு அத்தனை அவசியமானதல்ல. எனினும் நாம் பொதுவாகக் கலைகள் என்பதால் விளங்கிக் கொள்வதை பின்வருமாறு வகைப்படுத்த முடியும்.
1. நிகழ் கலைகள்: (நடனம், இசை, நாடகம்இ கூத்து, சொற்பொழிவு, தற்காப்பு கலை போன்றவை)
2. எழுத்துக் கலைகள்: (கதை, கவிதை, கட்டுரை, நாடகம் போன்றவை)
3. கட்புலக் கலைகள்: (ஓவியம், சிற்பம், புகைப்படம், கட்டடக்கலை போன்றவை)
4. கட்புலனாகாக் கலைகள்: (மருத்துவம், மாந்திரீகம், சூனியம் போன்றவை)

கலை என்பது ஓர் படைப்பு. எந்தக் கலையை எடுத்துக்கொண்டாலும் அங்கு ஓர் படைப்பாளியாக மனிதன் நிச்சயம் தொடர்பு பட்டிருப்பதனைக் காணலாம். மனிதனால் ஆக்கப்படாத எதனையும் நாம் கலை என்று குறிப்பிடுவது கிடையாது. நாம் வாழும் சூழலில் எம்மைச் சுற்றி ஏராளமான அழகிய பொருட்கள் இயற்கையாகவே காணப்படுகின்ற போதும் இயற்கையின் அழகை நாம் கலை என்றோ கலைப் பொருள் என்றோ குறிப்பிடுவதில்லை.

வானத்திரையில் மேகத் தூரிகைகள் தீட்டும் அற்புத ஓவியங்களோ, கடலின் தாளத்திற்கு கரையில் ஆடும் அலைகளின் அதிசய நடனமோ அல்லது காட்டு மரங்களிலிருந்து மீட்டப்படும் சில்வண்டுகளின் ரீங்கார இசையோ கலை என்று போற்றப்படுவது கிடையாது. அன்றலர்ந்த ரோஜாப் பூ ஓர் கலைப்படைப்பன்று, மாறாக அதனை ஓவியமாகத் தீட்டினாலோ, ஒளிப்படம் எடுத்தாலோ கவிதையாகப் பாடினாலோ அது கலையாகிறது. ஓர் படைப்பாளியின் கைவண்ணத்தில் பிறப்பதே கலையாகும்! ஓர் உன்னதக் கலைப்படைப்பின் பெருமையெல்லாம் அதனை ஆக்கிய கலைஞனையே சென்றடைய வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது. எனினும் அம் மாபெரும் கலைஞன் வாழும் சூழலும், அக்கலைஞனைச் சுற்றி நடப்பவையும், சூழலிலும் அக்கலைஞனின் உள்ளதிலும் ஏற்படும் மாற்றங்களும் கலைப்படைப்பின் தரத்தினை தீர்மானிப்பதில் அளப்பரிய பங்கினை வகிக்கின்றன.

மாற்றம்

சுமார் நானூற்றி ஐம்பது கோடி (4.54 Billion) வருடங்களுக்கு முன்பு உருவாகியதாக கணிக்கப்பட்டுள்ள இப் பூமி முதற்கொண்டு 200,000 வருடங்களுக்கு முன்னர் தோன்றி இன்றுவரை வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதகுலம் உட்பட இங்குள்ள அனைத்து உயிரினங்களும் சடப்பொருட்களும் தொடர்ச்சியான மாற்றங்களுக்கு உட்பட்டே வந்திருக்கின்றன. மாறிவரும் இவ்வுலகில் மாறாதிருப்பது மாற்றம் மட்டுமே என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு கூற்று.

ஐம்பூதங்களும் மாறுகின்றன. அவற்றில் உருவாகிய தாவரங்களும், அவற்றை சுகிக்கும் விலங்குகளும் கூட மாற்றத்திற்குட்படுகின்றன. எல்லாவற்றையும் மாற்றியமைக்கவல்ல மனித குலத்திலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. கட்புலனிக்கு வசப்படுபவை மட்டுமன்றி, தத்துவங்கள், கோட்பாடுகள், பண்பாட்டு நெறிகள், வழிபாட்டு முறைகள், கலாசார விழுமியங்கள், கலை மரபுகள் என கட்புலனாகாதவை கூட இம் மாற்றங்களில் தப்பியதில்லை.

ஓன்றிலிருந்து இன்னுமொன்றாகப் போதலே மாற்றம் எனப்படுகிறது. எமது மூதாதையர் மர வாழ்க்கையிலிருந்து தரை வாழ்க்கைக்கு மாற முற்பட்ட போதே நாகரீகம் வளரத் தொடங்கியது. தமக்கான கலை கலாசார மரபுகள் தோற்றம் பெற்றதுதிலும், மெருகூட்டப்பட்டதிலும் மாற்றத்தின் பங்கு இருந்தே வந்திருக்கிறது. கலை கலாசார மரபுகளின் மாற்றத்திற்குப் பிரதானமாக புதிய கண்டுபிடிப்புக்கள், நவீனமயமாதல், தொழில்மயமாதல், நகரமயமாதல், கலாசாரப் புரட்சி, தகவல் தொழில்நுட்பப் புரட்சி, மேற்கு நாடுகளின் காலணித்துவ ஆட்சி மற்றும் மேற்கத்தைய கலாசாரக் கலப்பு போன்ற பல்வேறு காரணிகளைக் கூறலாம். மாற்றம் நல்லது என பொதுவாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பினும் மாற்றத்தின் விளைவுகள் அல்லது மாற்றம் ஏற்படுத்தும் தாக்கங்கள் எப்பொழுதும் நன்மையானதாக மட்டுமே இருந்ததில்லை.

எல்லா துறைகளிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் மாற்றத்தின் நிழல்  கலைத்துறையில் குறிப்பாக மட்டக்களப்பின் மரபுக் கலைகளில் படியாமலிருக்க வாய்ப்பில்லை. ஆயின் அது எமது கலை மரபுகளில் எவ்வாறான தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது அல்லது ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பவற்றை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

மட்டக்களப்பின் மரபுக் கலைகள் எவையெவை என்று பட்டியலிடுவதோ அல்லது அக்கலைகளின் சிறப்பம்சத்தினை விபரிப்பதோ இக்கட்டுரையின் பிரதான நோக்கமன்று. அவ் வரலாற்று முக்கியத்துவப் பணியைப் பல்வேறு அறிஞர்களும், ஆய்வாளர்களும் ஏலவே செய்து முடித்துவிட்டனர். மழையில் நனைந்துகொண்டு அந்த ஆனந்தத்தை அனுபவித்தபடியே மழையை அறிந்து கொள்வது ஒரு வகை. ஜன்னலோரம் அமர்ந்தபடி மழையைப் பார்த்து இரசித்து புரிந்து கொள்ளுதல் இன்னுமொரு வகை. இரண்டாவது வகை அணுகுமுறையினூடாகவே மீதிக் கட்டுரையை தொடர்வோம்.

வரிவடிவத்தில் படைக்கப்படும் “இயல்”, ஒலி வடிவத்தில் பாடப்படும் “இசை” மற்றும் உடல்மொழியால் வெளிப்படுத்தப்படும் “கூத்து” ஆகிய முத்தமிழ் கூறுகளில் மட்டக்களப்பின் மரபுவழி வந்த கலையாக கூத்துக் கலையே பிரதான இடத்தை வகிக்கிறது. மட்டக்களப்பின் பாரம்பரிய கலைகளில் கரகம், கோலாட்டம், கும்மி, வயல்வெளிப் பாட்டுகள், மீனவர் பாடல்கள், கொம்புமுறி போன்ற பல்வேறு வகைகள் காணப்பட்ட போதிலும் கூத்திற்கென்று ஓர் தனியிடம் காணப்படுகின்றது. கூத்து என்பது நடிப்புக்கலையையும், ஆடற்கலையையும் உள்ளடக்கியது என்பதால் இச்சொல் நாடகம் - நாட்டியம் இரண்டுக்கும் பொதுவானது.

பழந்தமிழர் வாழ்வில் இறைவழிபாடு மிகவூம் முக்கிய இடத்தைப் பெற்றிருந்த வேளையில் அவர்கள் ஆடியும், பாடியும் இறைவனை வழிபட்டதே கூத்தின் பிறப்பு. மட்டக்களப்பின் பாரம்பரியக் கலைகளில் ஒன்றான கூத்து பிரதானமாக கண்ணகி வழிபாட்டினை மையப்படுத்தியே ஆடப்பட்டதெனினும் அது வெறுமனே இறைவழிபாட்டிற்காக மட்டும் தோன்றியதன்று. மகாபாரதம், இராமாயணம் போன்ற காவியங்களும், புராணக்கதைகளும், வரலாறுகளும் தலைமுறை தலைமுறையாக அறியப்பட்டு வந்தது கூத்தின் மூலமே. வேளாண்மை, வேட்டையாடுதல் போன்ற சாதாரண வாழ்க்கைமுறைகளும் அவற்றில் சந்திக்கும் இடர்பாடுகளை எதிர்கொள்ளும் தந்திரங்களும் கூத்தின் மூலமே சந்ததி சந்ததியாக கற்பிக்கப் பட்டது. வாகரைப் பகுதிக்கே தனித்துவமான அப்பகுதி மக்களால் இன்றும் ஆடப்படும் “புலிக்கூத்து” ஓர் சிறந்த உதாரணமாகும்.

காட்டில் வேட்டைக்குச் செல்லும் போது காட்டு விலங்குகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் உத்திகளே இதன் கருப்பொருள். அவ்வாறே பொழுது போக்கை மையப்படுத்தி கேலியும் நகைச்சுவையும் கொண்டதாக ஆடப்படும் கூத்துகளும் உள்ளன. மட்டக்களப்பின் சந்திவெளிப் பகுதியில் ஆடப்படும் ஒருபுறம் முனிவர்களும், மறுபுறம் குறவர்களும் அமர்ந்து மத்திர வித்தைகளால் மோதுவது போன்ற மகிடிக்கூத்து மிகவவும் பிரசித்தி பெற்ற ஓர் பொழுது போக்குக் கலையாகும். பறைமேளக் கூத்து போன்ற குறிப்பிட்ட ஓர் சாதியினரால் மட்டும் ஆற்றுகை பண்ணப்படும் கலைவடிவங்களும் காணப்படுகின்றன.

இப்பிரதேசத்தில் மூன்று தசாப்தமாக இடம்பெற்ற கொடிய யுத்தம் இப் பாரம்பரியக் கலைகளை வளர்ப்பதிலும் இளம் சந்ததியினருக்குக் கற்பிப்பதிலும் பாரிய சவால்களை ஏற்படுத்தியிருந்ததை எவரும் மறுப்பதற்கில்லை. நான்கு இளைஞர்கள் ஒன்றாய்க் கூடுவதே உயிரைப் பணயம் வைப்பதற்குச் சமன் என்றிருந்த காலகட்டத்தில் முற்றுமுழுதாக ஒரு தலைமுறையே இப் பாரம்பபரியக் கலைகளின் தொடர்ச்சி அறுந்த நிலையில் காணப்படுகின்றதென்பதே யதார்த்தம். அன்றைய உணவிற்கு அதே நாள் வருவாயை மாத்திரம் நம்பியிருக்கும், பொருளாதார ரீதியில் மிகவும் நலிந்த நிலையிலுள்ள அதே கிராமப்புற மக்கள் தான் இக்கலைகளைச் சாவின் விளிம்பிலிருந்து மீட்டெடுக்கும் பாரிய பொறுப்பையும் சுமக்கின்றனர். பயிற்சியின் போது ஏற்படும் தினசரி செலவுகளுக்கே திண்டாடும் நிலையில் இக்கலைகளை மேடையேற்றும் செலவுகள் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

மேலும் இக்கலைகளைப் பயில வேண்டிய இளம் சமுதாயத்தினரின் இரசணையூம், ஆர்வமும் வேறு ஒரு தளத்தில் காணப்படுவது மற்றுமொரு சவால். சினிமாப் படங்களும், தொலைக்காட்சி நாடகங்களும், முகப்புத்தகம் (FaceBook) போன்ற சமூக வலைத்தளங்களும், மட்டைப்பந்தாட்டமும் (Cricket) அவர்களின் பிரதான ஆர்வமாகக் காணப்படும் இன்றைய நவீன காலகட்டத்தில் கூத்துப் பழகவும்இ இசை பயிலவும் எத்தனை பேர் முன்வருவார்கள்? உலகின் எந்தவொரு மூலையிலும் நடக்கும் நிகழ்வுகளையும் காணொளியாக (Video) சேமித்து வைத்திருக்கும் மிகவும் பிரபல இணையத் தளமான “யூ டியூப்” (You Tube) தளத்தில் இன்றைய திகதியிலுள்ள அனைத்துக் காணொளிகளையும் ஒருவர் சோறு தண்ணீர் கூட இல்லாமல் அமர்ந்து பார்த்து முடிப்பதென்றாலும் சுமார் 600 வருடங்கள் தேவைப்படும் என்கிறது ஓர் ஆய்வு. கவிதை வாசிக்கவே நேரம் இல்லாமலிருக்கும் பரபரப்பான இவ்வுலகில் கவிதை எழுதுவதற்கு எங்கே நேரம் இருக்கப் போகிறது?

பறை அடிப்பவர்கள் தீண்டத்தகாதவர்கள் போன்ற மனப்பாங்கு உள்ள இச்சமூகத்தில் பறைமேளக் கூத்து போன்றவற்றைப் பழகுவதையும் அரங்கேற்றுவதையும் புதிய தலைமுறையினர் தவிர்க்கத்தான் செய்வார்கள். இது போன்ற யதார்த்தங்களும் மட்டக்களப்பின் பாரம்பரியக் கலைகள் மருவி வருவதற்கான மற்றுமொரு காரணம். பெற்றோரும் தமது பிள்ளைகளின் எதிர்கால நிரந்தர வருமான நோக்கில் தொழில் முறைக் கல்வியையே முன்னுரிமைப் படுத்துவதோடு பிள்ளைகள் தாமாகவே கலைகளின் பக்கம் ஈர்க்கப்பட்டாலும் கூட பரீட்சையில் சிறந்தபெறுபேறுகள் பெறுவதனைக் கருத்திற் கொண்டு பிள்ளைகளின் கலையார்வத்தைக் கலைத்துவிடும் நிலமைகளும் குறிப்பாக நகர்ப்புறங்களில் காணப்படுகின்றன.

கால மாற்றத்தாலும் நவீன கருவிகளின் வருகையாலும் சில கலைவடிவங்களின் தேவைகள் மங்கிவிட்டன. சித்திரப் பிரதிமை (Portrait) என்பது ஓவியக் கலையின் ஓர் உன்னத வடிவமாகும். ஓரு நபரின் முகத்தை அப்படியே அவரின் அந்தக் கணத்தின் மனநிலையைப் பிரதிபலிப்பதாக (Mood) வரைவது சித்திரப் பிரதிமை எனப்படும். நாட்கணக்கில் வரையப்படும் இக்கலை வடிவத்தில் நவீன ஓளிப்படக்கருவிகளின் (Camera) வருகை மிகப்பெரும் தாக்கத்தினைச் செலுத்தியிருக்கிறது. மின்னல் வெட்டும் நேரத்தில் படமெடுத்து விடலாம். இடிமுழங்கி முடியூமுன் பிரதியெடுத்துவிடலாம். அவ்வாறே மாதக்கணக்கில் இராட்சத அளவில் வரையப்பட்டுவந்த விளம்பர ஓவியங்களும் சினிமா பதாதைகளும் (Cut-out) கணணியின் துணையூடன் சில மணித்தியாலங்களில் சாத்தியமாகின்றன. அடுத்த தலைமுறையில் இப்படிப்பட்ட கலைஞர்களைக் காணக்கிடைக்காது என்பது ஓரளவு உறுதியாகிவிட்டது.

இவ்வாறு பல்வேறு சவால்கள் காணப்படினும் மட்டக்களப்பின் பாரம்பரியக் கலைகள் முற்றுமுழுதாக முடங்கிப் போய் விடவில்லை. கலாசார அமைச்சும், பிரதேச செயலகங்கள் தோறும் உள்ள கலாசார உத்தியோகத்தர்களும், கிராம மட்ட கலைக்குழுக்கள், கலாசாரச் சங்கங்கள், மூத்த கலைஞர்கள், கிழக்குப் பல்கலைக்கழக சமூகத்தினர், கலையார்வலர்கள் என பல்வேறு மட்டங்களில் இன்று இக்கலைகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் வேலைத்திட்டம் இடம்பெற்று வருவதனைக் காணலாம். எந்த மாற்றங்கள் எம் கலைகளில் தாக்கம் செலுத்துகின்றனவோ அதே மாற்றங்களை ஊக்க சக்தியாக மாற்றி கலைகளை வளர்ப்பதே புத்திசாலித் தனம்.

நவீன தொழில்நுட்பங்களையும், கருவிகளையும், கணணிப் பயன்பாட்டையும், இலத்திரனியல் ஊடகங்களையும், சமூக வலைத்தளங்களையும் ஒதுக்கிவிட்டு எம் கலைகளை வளர்ப்பதென்பது இனிவருங் காலங்களில் சாத்தியப்படாது. எமது கலை மரபுகளைக் காலக்குதிரையின் முதுகின் மீது ஏற்றிவிடாமலும் அதே வேளை அதன் கடிவாளத்தை விட்டுவிடாமலும் அதற்குச் சமாந்தரமாகப் பயணிக்கவேண்டிய கடப்பாடு ஒவ்வொரு கலைஞனுக்கும் உண்டு.

கவிதைகளும், கட்டுரைகளும் இணையத்தில் ஏறிவிட்டதனால் இன்று பலரைச் சென்றடைகிறது. இசையும்இ நாடகமும் ஒலி-ஒளி வடிவங்களாக பதிவு செய்யப்பட்டு கணணி மூலம் தொகுக்கப்பட்டு வெளியிடப்படும் போது கூடுதல் வரவேற்பைப் பெறுகின்றன. ஒலிவாங்கிகளும், ஒலி பெருக்கிகளும் கண்ணைக் கவரும் பல வர்ணங்களில் பாய்ச்சப்படும் ஒளி வெள்ளமும் இன்று மேடை நிகழ்வுகளுக்குக் கூடுதல் பெறுமதி சேர்க்கின்றன. ஓலிபெருக்கும் சாதனங்களின் வருகை மேடையில் தோன்றும் கலைஞன் சாதாரண குரலில் பேசுவதையோ அல்லது பாடுவதையோ அரங்கின் பின்வரிசைப் பார்வையாளன் வரை கொண்டு சேர்ப்பதினால் மேடைக் கலைஞனின் பணி இலகு படுத்தப்படுகிறது.

அந்நாட்களில் மங்கிய ஒளியில் மேடையில் தோன்றும் கலைஞனின் முகபாவங்கள் தூரத்திலிருக்கும் பார்வையாளனுக்குத் தெரிய வேண்டுமென்பதற்காக முகத்தில் சற்று தூக்கலாக ஒப்பனைக் கலைஞர்கள் தம் கைவரிசையைக் காட்டியிருப்பர். இதனால் அருகிலிருந்து ஒருவரையொருவர் பார்க்கும் சக கலைஞர்கள் தம்மையறியாமல் சிரித்துக்கொள்ளும் சந்தர்ப்பங்களும் உண்டு. சற்றுக் கூடுதலாக கண் மையை அல்லது உதட்டுச்சாயத்தைத் தீட்டியிருக்கும் ஒருவரைப் பார்த்து “கூத்திற்கு வேடமிட்டதைப் போன்று” எனும் கேலி இன்றும் எம்மத்தியில் இருக்கிறது.

ஆனால் தற்பொழுது மேடை நிகழ்வுவூகள் பெரும்பாலும் பிரகாசமான வெளிச்சமும் சமகாலத்தில் உருப்பெருக்கி இராட்சதத் திரைகளில் ஒளிபரப்பப்படும் வசதிகளைக் கொண்ட அரங்குகளில் நிகழ்த்தப் படுகின்றன. எனவே யதார்த்தமான அழகான ஒப்பனைகள் தற்பொழுது சாத்தியமாகியிருக்கின்றன. ஒளியமைப்பினால் மேடையின் கட்புலனாகும் பகுதிகள் தற்பொழுது கட்டுப்படுத்தப் படுத்தப்படுகிறது. எனவே அரங்கின் வெளிச்சமான பகுதியில் நிழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கும் போது இருளான பகுதியில் அடுத்த காட்சிக்கான தயாரிப்புகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும். இதனால் தற்பொழுது திரை திறந்து மூடுதல் எனும் செயற்பாடு அற்றுப் போனதுடன் நேரத்தை சேமிக்கவும் உதவுகின்றது.

நவீன தொழில்நுட்ப வசதிகள் எமது பாரம்பரியக் கலைகளைப் பழகுவதிலும், அரங்கேற்றுவதிலும் மாத்திரம் கைகொடுக்கவில்லை, மாறாக அவற்றை ஆவணப்படுத்துவதிலும், பிற நாடுகளில் - பல சமூகத்தினரின் மத்தியில் சிறப்பம்சங்களை எடுத்தியம்பவும் பயன்படுகின்றன. கடந்த 11/04/2014 அன்று பேராசிரியர் மௌனகுரு அவர்களின் இராவணேசன் கூத்து சிங்கப்பூர் நகரில் காணொளிக்காட்சியாக அரங்கேற்றப்பட்டதுடன் இலங்கைத் தமிழ் கூத்துக்களும் அது நாடகமாக வளர்ந்த வரலாறு பற்றியும் இராவணேசன் கூத்து தயாரிப்பைப் பற்றியும் பேராசிரியரினால் ஓர் அறிமுகம் வழங்கப்பட்டது. இவ்வாறான விளம்பரப்படுத்தல் செயற்பாடுகளின்றி ஓர் கலையின் ஆயுளை நீடிக்கமுடியாது.

ஓரு கலையை படைப்பவனின் உத்திகளும் சிந்தனைகளும் மெருகேற அதற்கேற்றாற்போல் பார்வையாளனின் இரசிப்புத்திறணும் வளரவேண்டியது அவசியமாகிறது. அந்தவகையில் பார்வையாளனைத் தயார்படுத்தும் பொறுப்பும் கலையைப் படைப்பவனையே சாரும்.

இவ்வாறு நவீன தொழில்நுட்ப வசதிகளையும் வாய்ப்புக்களையும் உள்வாங்கிக் கொண்டு இக் கலைத்துறையில் ஈடுபடுபவர்கள் எமது பாரம்பரியக் கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வார்கள் என்பதில் ஐயமில்லை.

இசை மற்றும் நாடகக் துறைகளைப் பொறுத்தமட்டில் இத் தொழில்நுட்பப் பயன்பாடுகள் அக்கலைகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை. ஆனால் அக்கலைகளைப்; பார்வையாளனிடம் கொண்டு சேர்க்கும் உத்தியில் தான் தாக்கம் செலுத்துகின்றன. உதாரணமாக நவீன தொழில்நுட்பங்களின் ஆதிக்கத்தினால் கூத்தின் பிரதான அம்சங்களான களரி கட்டுதலோ, பின்பாட்டுக்காரர்களோ, இசைக்கருவிகளோ, கட்டியங்காரர்களோ ஏன் ஆடைஅணிகலன்களோ கூட மாறிவிடவில்லை. இவ்வாறு மாறாமல் மரபைப் பேணுவது அக்கலையில் ஈடுபடும் ஒவ்வொரு கலைஞனதும் கடமை.

நன்னூல் நூற்பா எண் 387 இல் மரபு என்பது என்னவென்று இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.
“எப்பொருள் எச்சொல்லின் எவ்வாறு உயர்ந்தோர்
 செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே”
அறிவுடையோர் எந்தப் பொருளை எந்தச் சொல்லால் எந்த முறைப்படி குறிப்பிட்டார்களோ அதே முறைப்படி வழங்குதல் மரபாகும் என்பதே இதன் பொருள். உதாரணமாக பசு ஈன்றதைக் “கன்று” என்றும் நாய் ஒலியெழுப்புதலை “குரைத்தல்” என்றும் கூறுவது மரபு. பசுவின் பிள்ளையென்றோ அல்லது நாய் பேசியதென்றோ கூறுவது மரபு அல்ல.

சொல்லையும் பொருளையும் மட்டும் அல்லாது அவர்கள் மேற்கொண்ட செயல்களையும் படைத்த கலைகளையும் அவ்வாறே பின்பற்றுவது தான் மரபு. இன்று நேரமின்மை காரணமாகவும், இடப் பற்றாக்குறையினாலும், போதிய தௌிவின்மையினாலும் எமது கலை கலாசார நிகழ்வூகள் சில மரபை மீறியதாகவும் நிகழ்த்தத் தலைப்படுகின்றன. நாட்டியக் கலையில் பின்பாட்டுக்காரர்கள் ஓர் முக்கிய அங்கமாகும் ஆனால் சில மேடை நிகழ்வுகளில் பின்பாட்டுக்காரர்களைக் காணக்கிடைப்பதில்லை. அவர்களின் இடத்தை இசைத்தட்டுக்களும் இசை நாடாக்களும் ஈடுசெய்கின்றன. ஆனால் அவை எமது மரபல்ல.

முற்றத்திலிட்ட அரிசிமாக் கோலம் இன்று அச்சடிக்கப்பட்டு ஒட்டும் வடிவிலிருக்கிறது. வாசலில் தொங்கும் மாமாவிலைத் தோரணம் கடதாசியில் வந்தாயிற்று. விறகடுப்பு மூட்டி வாசலில் வைத்த தைப்பொங்கல் பானை சமயல் அறைக்குள் சென்று எரிவாயு அடுப்பில் ஏறிவிட்டது. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் நிலவும் இடப்பிரச்சினை மற்றும் பரபரப்பு வாழ்க்கை போன்றவை இந்நிலைக்குக் காரணமாக இருப்பதுடன் அதைத் தவறென்றும் கூறமுடியாது. இருப்பினும் அது எமது மரபல்ல.

யோ.நிசந்தராசன்இ (நாடகமும் அரங்கியலும் - சிறப்புக்கற்கை) என்பவர் தனது “பறை மேளக்கூத்தும்; அதன் இன்றைய நிலையும்” எனும் கட்டுரையில் பின்வருமாறு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.
“பறைமேளக்கூத்தினுடைய மரபுத்தன்மைகள் மாற்றமடையாமல் ஆற்றுகைகள் இடம் பெறுதல் வேண்டும். ஆனால் இன்று படித்தோர் மட்டங்களிலே நவீனத்துவ சிந்தனைகள் உள்வாங்கப்பட்டு பாரம்பரியக் கலைகளை மாற்றுவது ஒரு மனம் வருந்தத்தக்க செயற்பாடாகவே அமைகின்றது. கடந்த 2011 பங்குனி 25,26,27ஆம் திகதிகளிலே யாழ்ப்பாணத்திலே இடம் பெற்ற இசை விழாவிலே பல கலை நிகழ்வுகள் இடம் பெற்றன. இவ்விழாவில் பறைமேளக்கூத்தானது மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவக நாடகத்துறை மாணவர்களால் அளிக்கை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் சொர்ணாலி என்றவாத்தியக்கருவி வாசிக்கப்படவில்லை. அத்தோடு உடையமைப்பு பரதநாட்டிய பாணியில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அத்தோடு இதன் ஆட்டமுறைகள் கூத்துடனும், கண்டிய நடனங்களுடனும் தொடர்பு பட்டனவாகவே இருந்தது. இவ்வாறான செயற்பாடுகள் பாரம்பரியத்தன்மைகளினை மீறுவதாகவே இருக்கின்றது.”

இவ்வாறான மரபை மீறும் செயற்பாடுகள் தொடருமேயானால் நிச்சயமாக அடுத்து வரும் சந்ததியினரிடம் நாம் எமது அடையாளங்களைத் தொலைத்தவர்களாகவே வாழ்வோம்.

“பண்பாட்டின் எல்லா நிலைகளிலும் மக்களால் பின்பற்றப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதியே மரபு” (Tradition) என்கிறது தமிழ் அகராதி.

மரபின் முக்கிய அம்சங்களே பழமையைப் பேணுதலும், எம் முன்னோர்கள் சொன்னதைக் கண்ணெனப் போற்றுதலும்தான். ஏனெனில் எமது முன்னோர்கள் கண்டறிந்து சொல்லிய உண்மைகளும் நன்மைகளுமே தலைமுறை தலை முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்து இன்று மரபாக நிலைத்திருக்கின்றது.

மரபுக் கலைகள் என்பவை எமது முன்னோர்கள் பயணம் செய்த பாதைகள். மனப்பாரங்களை இறக்கி வைக்க அமைக்கப்பட்ட சுமைதாங்கிகள். வாழ்கையின் வாசலை அலங்கரிக்க அவர்கள் கட்டிய அழகிய தோரணங்கள். எமது வாழ்க்கையை அவ் அழகிய பாதையினூடே பயணிக்க நாம் கடமைப்பட்டவர்கள். பாதையை செப்பபனிடுவதும் அலங்கரிப்பதும் இன்றைய காலத்தின் தேவையாக இருக்கலாம், ஆனால் பழமை மாறாதிருப்பதை அத்தனை கலைஞர்களும் உறுதிப்படுத்திக் கொள்ளுவது அவசியமாகும். நவீனத்துவச் சிந்தனைகள் கலைத் தோரணங்களைக் கலைத்துவிடக் கூடாது என்ற எண்ணம் படைப்பாளிக்கும் இருக்கவேண்டும். பார்த்து இரசிப்பவர்களுக்கும் வரவேண்டும்.

கால மாற்றத்தில் கலைகள் பயணிக்கும் வாகனமும், வேகமும் மாறட்டும். ஆனால் கலை மரபுகள் மாறாதிருக்கட்டும்!

ப.முரளிதரன்இ 47/1, புதிய கல்முனை வீதி, மட்டக்களப்பு. -  http://amfb.webs.com 

(2014 ஆம் ஆண்டு மண்முனை வடக்கு கலை கலாசாரப் பேரவையினால் வெளியிடப்பட்ட தேனகம் சஞ்சிகையில் இடம்பெற்ற கட்டுரை)