Friday, February 4, 2011

கண்ணீரில் கரைகிறதா காதல் சின்னம்!

http://www.webcottage.com/about-tajmahal/gifs/taj-mahal-agra-sml.jpg


அந்தோ பரிதாபம்;
காதலி
காட்டாற்று வெள்ளத்தில் - நம்
தாஜ்மஹால்
கரைந்து போவதா ?

என்
முத்தத்தின் சுவடுகள் - உன்
கண்ணீராலேயே
கழுவப்படுவதா ?

காதலி...!
மீண்டும் வா
உறுதியாய் கட்டுவோம்
கன்னங்களில்
தாஜ்மஹால்கள் அல்ல
இதயங்களில் - இருப்பிடங்கள்..
நிரந்தரமாய் !!

ஓசை மட்டும் தமிழருக்கு!

இது 1998ம் ஆண்டு இலங்கையின் 50வது சுதந்திர தினத்தன்று நான் எழுதிய கவிதை. இன்றைய காலகட்டத்திற்கும் பொருத்தமாகவே இருக்கிறது. எனவே உங்களுடன் பகிர நினைத்தேன்.

---------()-()-()----------

http://i.colnect.net/images/f/457/067/50-Cents.jpg

நாற்பத்தி எட்டில்

பரிசாக நாம் சில

பொற்காசுகள் பெற்றோம்...

*

வெள்ளைக்காரன் தந்த

சில்லறைக் காசை நாம்

கைகளில் வாங்கவில்லை;

பைகளில் வாங்கினோம்.

*

ஐம்பது வருடங்களாய்

மாற்றி மாற்றி

பையைக் குலுக்கினா்

அரசியல்வாதிகள்.....

*

காசெல்லாம் சிங்களவர்க்கு!
ஓசை மட்டும் தமிழருக்கு!!
-------------