இது 1998ம் ஆண்டு இலங்கையின் 50வது சுதந்திர தினத்தன்று நான் எழுதிய கவிதை. இன்றைய காலகட்டத்திற்கும் பொருத்தமாகவே இருக்கிறது. எனவே உங்களுடன் பகிர நினைத்தேன்.
---------()-()-()----------
நாற்பத்தி எட்டில்
பரிசாக நாம் சில
பொற்காசுகள் பெற்றோம்...
*
வெள்ளைக்காரன் தந்த
சில்லறைக் காசை நாம்
கைகளில் வாங்கவில்லை;
பைகளில் வாங்கினோம்.
*
ஐம்பது வருடங்களாய்
மாற்றி மாற்றி
பையைக் குலுக்கினா்
அரசியல்வாதிகள்.....
*
காசெல்லாம் சிங்களவர்க்கு!
ஓசை மட்டும் தமிழருக்கு!!
-------------
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அருமை, அருமை காசி எல்லாம் சிங்களவருக்கு ஓசை மட்டும் தமிழருக்கு, குலிக்கியது அரசியல் வாதிகள்
Post a Comment