Tuesday, August 3, 2010

வீட்டில் நடக்கும் நகைச்சுவைகள்...

இன்று எனக்கும் என் மனைவிக்குமிடையில் நடந்த ஒரு சுவையான உரையாடல். நான் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் படம் பார்த்ததால் வந்தது. கொஞ்சம் நகைச்சுவையாகவும், கடியாகவும் இருந்ததால் உங்களுடன் பகிர நினைத்தேன்.
---------------------------------------------------------------------------------
(என் மனைவி) நீங்க இப்ப ஒரே படம் பாக்குறீங்க... என்ன காரணம்? 

(நான்) இல்லயே... நான் ஒரே படத்த பார்க்கலயே... வேற வேற படத்த தானே பாக்கிறன்.... 

(என் மனைவி) ஐயோ... ஏன் ஒவ்வொரு நாளும் படம் பாக்கிறீங்க எண்டு கேக்கிறன்... 

(நான்) ஒரே நாள்ல எல்லா படத்தையும் எப்பிடி பாக்கிறது... அடுத்த நாள் வேலைக்குப் போக வேண்டாமா? அதுதான் ஒவ்வொரு நாளும் பாக்கிறன்! 

(என் மனைவி) நான் சொல்லுறது உங்களுக்கு விழங்கலயா? ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு நாளும் பாக்கிறீங்க இப்ப.... 

(நான்) அதுக்கு என்ன இப்ப? ஒரே படத்தை ஒவ்வொரு நாளும் எப்பிடி பார்க்கிறது? 

(என் மனைவி) !#?#"!?? -- நான் சொல்ல வந்தது என்ன எண்டா... இப்ப நீங்க தொடர்ச்சியா படம் பாக்கிறீங்க... 

(நான்) படத்த தொடர்ச்சியா தானே பாக்க வேணும்? விட்டு விட்டு பார்த்தா சரியா விழங்காது.... 

(என் மனைவி) ----------------------?????????????!!!!!!!!!!!!

இதுக்குப் பிறகு என்ன நடந்திருக்கும்???

[] 
\
[] 
 
[] 
 
[] 

[] 
 
[] 

 [] 

 [] 

 [] 

 [] 

 [] 

 [] 

 [] 

[]

[]

]

4 comments:

jenatha said...

இதுக்கு பெயர் சண்டை இல்லை. விதண்டாவாதம். ஆனால் இனிய விதண்டாவாதம்

விவிக்தா said...

சில விசயங்கள இப்பிடி அப்பாவித்தனமா சமாளிக்கலாம்.

நம்பிக்கை said...

முரலியுடன் நான் கூட நெருங்கிப் பழகுவதால் முரலி மற்றும் ஜானுவின் உரையாடல்(சண்டை) இப்படித்தான் இருந்திருக்கும்.
இதுதான் உண்மைச் சண்டை...
ஜானு: முரலி இப்ப நீ ஒரே படம் பாக்குறா ... என்ன?

முரலி: போடி லூசு….. நான் ஒரே படத்த பார்க்கலயே... வேற வேற படத்த தானே பாக்கிறன்....

ஜானு: ஐயோ... ஏன் ஒவ்வொரு நாளும் படம் பாக்கிறீங்க எண்டு கேக்கிறன்...

முரலி: ஒரே நாள்ல எல்லா படத்தையும் எப்பிடி பாக்கிறது... அடுத்த நாள் வேலைக்குப் போக வேண்டாமா? அதுதான் ஒவ்வொரு நாளும் பாக்கிறன்!

ஜானு: நான் சொல்லுறது உனக்கு விழங்கலயா டா? மரமண்ட….. ஒவ்வொரு படத்தையும் ஒவ்வொரு நாளும் பாக்கிறீங்க இப்ப....

முரலி: அதுக்கு என்ன இப்ப? ஒரே படத்தை ஒவ்வொரு நாளும் எப்பிடி பார்க்கிறது?

ஜானு: !#?#"!?? – இந்த லூசேட கதச்சிக் களர ஏலாது. மாமி பாருங்க மாமி இவன….
விவிக்தன்: ஏய்!... சத்தம்…..
ஜானு: நான் சொல்ல வந்தது என்ன எண்டா... இப்ப நீங்க தொடர்ச்சியா படம் பாக்கிறீங்களே…..... ஏன்?

முரலி: படத்த தொடர்ச்சியா தானே பாக்க வேணும்? விட்டு விட்டு பார்த்தா சரியா விழங்காது....

ஜானு: இந்த லூசுகளுடன் கதைக்கிறத்த….
குடு….குடு…..குடு………………….
ஜானு: ஆ…. சரி மற்ற லூசும் வருகுது………. வாங்க மாறன்னா….. எங்க சிந்து?
மாறன்: அன்ரி TEA போடல்லயா…………………..

சஞ்சயன் said...

உங்க வீட்டுக்காரம்மா ரொம்ப நல்லவங்க போல ... அது தான் இதுவரை டமேஜ் ஆகாம இருக்குறீங்க..